Sunday, December 31, 2017

HISTORY OF NEW YEAR & WISHES 2018


"Before the calendar turns a new leaf over, before the social networking sites get flooded with messages, before the mobile networks get congested, let me take a quiet moment out to wish you a wonderful, happy, healthy and prosperous New Year 2018!"


History of New Year

In 45 B.C., New Year’s Day is celebrated on January 1 for the first time in history as the Julian calendar takes effect.
Soon after becoming Roman dictator, Julius Caesar decided that the traditional Roman calendar was in dire need of reform. Introduced around the seventh century B.C., the Roman calendar attempted to follow the lunar cycle but frequently fell out of phase with the seasons and had to be corrected. In addition, the pontifices, the Roman body charged with overseeing the calendar, often abused its authority by adding days to extend political terms or interfere with elections.
In designing his new calendar, Caesar enlisted the aid of Sosigenes, an Alexandrian astronomer, who advised him to do away with the lunar cycle entirely and follow the solar year, as did the Egyptians. The year was calculated to be 365 and 1/4 days, and Caesar added 67 days to 45 B.C., making 46 B.C. begin on January 1, rather than in March. He also decreed that every four years a day be added to February, thus theoretically keeping his calendar from falling out of step. Shortly before his assassination in 44 B.C., he changed the name of the month Quintilis to Julius (July) after himself. Later, the month of Sextilis was renamed Augustus (August) after his successor.
Celebration of New Year’s Day in January fell out of practice during the Middle Ages, and even those who strictly adhered to the Julian calendar did not observe the New Year exactly on January 1. The reason for the latter was that Caesar and Sosigenes failed to calculate the correct value for the solar year as 365.242199 days, not 365.25 days. Thus, an 11-minute-a-year error added seven days by the year 1000, and 10 days by the mid-15th century.
The Roman church became aware of this problem, and in the 1570s Pope Gregory XIII commissioned Jesuit astronomer Christopher Clavius to come up with a new calendar. In 1582, the Gregorian calendar was implemented, omitting 10 days for that year and establishing the new rule that only one of every four centennial years should be a leap year. Since then, people around the world have gathered en masse on January 1 to celebrate the precise arrival of the New Year.

Saturday, December 30, 2017

Cold & Congested Nose - Home Remedies



As this is the winter season and weather keeps fluctuating common cold and fever are the more common ailments what most of us suffer from
The Below are the simple home remedies for relief from cold and congested nose 
Boil sukku powder(Dry ginger powder) or eucalyptus leaves in one litre of water & inhale the steam. Make sure to cover youself with a blanket.(like Vethu pidikarathu or aavi pidikarathu)

Have a mixture of lemon juice and honey when you are suffering from cold.



For nagging cough and chest congestion, boil 3 cups of water with 2 fresh betel leaves and 4 crushed peppercorns, till the water is reduced to half. Strain and drink every morning and night with a teaspoon of honey.

Home Remedies for Cold & Cough (Paati Vaithiyam) 

For cough, add a pinch of salt with two pinch of turmeric powder in one glass of warm water and gargle.

Keep a piece of ‘Chita rathai’ in your mouth.(You can get Chita rathai in naatu marundu kadai).

Chew a clove with a piece of Sugar Candy (panag KalKandu).

Take a half teaspoon of sukku(dry ginger) powder, a pinch of clove with a pinch of cinnamon powder and honey in a cup of boiled water and drink it as tea.

Take 1 cup of hot milk with a pinch of turmeric powder and add 1/2 spoon black pepper powder fried in ghee.

In a glass of hot milk add pepper powder,turmeric powder and jaggery. Drink the milk before going to sleep.

Boil thulasi in a glass of water. Allow it to boil till the water reduces to half. Drink it mixing little honey to it.

Eat the powder of dried ginger and cumin with sugar for relief from cough.

Have the mixture of mustard paste and honey for good relief from cough.

Kashayam for cold and cough that will have immediate relief

Adhimadhuram,Chitharathai,Kandathippili,Chukku,Perichangai (dates unriped),Panankarkandu

Take little of each of the above ingredients and make them into small chunks and boil in 4 cups of water. Water should reduce to half and good aroma should come from the boiling water.
Take the above warm water either filtered or just like that twice a day.

Eat the powder of dried ginger and cumin with sugar for relief from cough.

Have the mixture of mustard paste and honey for good relief from cough.

For a good relief from cough, mix equal quantities of basil (tulasi) juice, honey and ajwain (omum) juice and drink on an empty stomach.

For fever and cough of children, give some honey mixed with water.

Drink basil water every day, it helps in keeping throat infection and cough at bay.

Friday, December 29, 2017

Palmyra sprout ??? ever wonder what it is and why so important?

பனங்கிழங்கு


பனங்கிழங்கு நிறைய பேர் இந்தப்பெயரை கூட இப்போது தான் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இந்த பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது.  பனமரத்தின் அடியிலும் விளையாது.   ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு.  கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? 
பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும்.இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம். ஆனால் முத்திப்போனால் சாப்பிட ஆகாது. இதை இப்படியே விடாமல் மண்ணில் புதைத்துவிட்டால் கொஞ்ச நாட்களில் முளைவிட்டு பனைமரம் வளர ஆரம்பித்துவிடும்.  அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப்பார்த்தால் அது தான் பனங்கிழங்கு.  அதை பிடுங்கி வந்து வேகவைத்து சாப்பிடுவர்.
மக்காச்சோளத்தில் உள்ளது போல முடிகள் நிறைய காணப்படும்.  நார்ச்சத்து அதிகம் இந்த கிழங்கில்.  ஒரு பெரிய பனைமரமே இந்த கிழங்கில் தான் உள்ளது.  இதனால் இதை சாப்பிட்டால் நமக்கு பலம் கிடைத்துவிடுகின்றது.
உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு கிடைக்கும் சீசனில் சாப்பிட்டால், உடனே பருமனாகிவிடுவார்கள்.  நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசியானது இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே இந்த கிழங்கில் உள்ளது.  எனவே இதைச்சாப்பிட்டப்பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் மேலோங்கும்.
இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மஞ்சள் பனங்கிழங்கிற்கு சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும். நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். வாயுத்தொல்லை நீங்கும். மிக்சியில் போட்டும் மாவாக்கி வைத்துக் கொள்ளலாம். வேகவைக்காத பனங்கிழங்கை நறுக்கி காயப்போட்டு மாவாக்கி அதை சுவைக்கு ஏற்ப கூழாக தயாரித்தோ, உப்புமா செய்தோ, தோசையாக தயாரித்தோ சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். பனங்கிழங்கை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். சில நோய்களும் கட்டுப் படும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.


பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும்.


OM NAMAH SHIVAYA - DHENUPUREESWARAR TEMPLE 1000 YEARS OLD (Madambakkam, Chennai)



தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்

இத்திருத்தலம் சென்னையில் தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இடத்தின் முந்திய பெயர் மாடையம்பதி என்பது ஆகும். பின்பு இது மாடம்பாக்கம் என்று ஆயிற்று.

மூலவர்: தேனுபுரீஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: தேனுகாம்பாள்
தல விருட்சம்: வில்வம்

கோவில் வரலாறு:

முன்பு கபில மகரிஷி என்ற முனிவர் சகரன் என்பவனின் மகனை அவன் செய்த தவறுக்காக சாபமிட்டார். அந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்தது. வசிஷ்ட முனிவரிடம் கேட்டதின் பெயரில் அவர், சகரனின் குலத்தில் வந்த பகீரதன் கங்கை நீரை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார்.

அதன்படி பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து சாப விமோசனம் தேடிக் கொண்டார்.

கபில மகரிஷியும் தன் கோபத்தாலும், சாபத்தாலும் சகரனின் தலைமுறை பெற்ற இன்னல்களுக்கு பிராயசித்தம் தேட எண்ணினார். சிவபூஜை செய்ய இடது கையில் சிவலிங்கத்தையும் வலது கையால் பூக்களை லிங்கத்தின் மீது தூவினார். சிவன் பிரத்தியட்சமாகி, தன்னை கையில் வைத்து பூஜை செய்தது எதற்காக என்று கேட்க, மணலில் வைக்க மனம் இல்லை என்றார்.

இடது கையில் வைத்து பூஜை செய்தது முறை அல்ல என்று கூறி அவரை ஒரு பசுவாக மாற்றினார். பசுவாக பிறந்த கபில மகரிஷி, சிவனை வழிபட்டு, அந்த இடத்திலேயே முக்தி பெற்றார்.
அந்த சமயத்தில் இந்த இடத்தை ஆண்ட மன்னர் ஒருவர் இந்த கோவிலை எழுப்பினார். பசு வடிவில் சிவனை கபில ரிஷி வழிபட்டதால், தேனுபுரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். தேனு என்றால் பசு என்று பொருள். இந்த சுவாமிக்கு உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார் என்றும் மற்றொரு பெயர் உண்டு. அன்னை யின் பெயர் தேனுகாம்பாள்.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் சுமார் 9 அங்குல உயரத்தில் 3 அங்குல அகலத்தில் உள்ளது. இந்த லிங்கத்தில் பசு மிதித்த தழும்பும் கல்லடிபட்ட பள்ளமும் இருக்கின்றது. சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகபரணமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. இத்தலம் சின்ன அளவில் இருந்தாலும், மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது ஆகும்.

கோவில் தூண்களில் பல சிற்பங் கள் மிகவும் அழகாக செதுக்கப்பட்டு அனைவரையும் கவரக்கூடிய அளவில் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. உற்சவரும் அப்போது புறப்பாடாகிறார். மற்றும் ஒரு தூணில் விநாயகர் வீணையுடன் காட்சி தருகிறார். மற்றொரு தூணில் முருகபெருமான் யானை மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். அவரது இடது கையில் சேவல் உள்ளது.

சிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா. கங்கா, பார்வதியுடன் சிவபெருமான் வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் வீற்றிருக்கிற்றார். தஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கின்றார். பைரவர் இருக்கின்றார். மடியில் சீதையை அமர்த்திருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் அவர் பாதத்தை வணங்கியபடி ஸ்ரீ ஆஞ்சநேயர், ஐந்து முக பிரம்மா, ஆகிய சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக பார்ப்பவர் மனதை கவரும்படியாக இருக்கின்றது.


தக்ஷிணாமூர்த்தி தென்புறத்தில் ஆலமரம் இல்லாமல் இருக்கிறார். கையில் கிளியுடன் துர்க்கை அழகாக தோற்றமளிக்கிறார்.

இந்த திருத்தலத்தின் விசேஷம் என்னவென்றால் இங்கு வந்து வேண்டும் பக்தர்கள் அனைவரின் நியாயமான வேண்டுகோள் அனைத்தையும் சிவபெருமான் தீர்த்து வைக்கின்றார் என்பது அனைவரின் நம்பிக்கை.

முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாய் இருக்கின்றனர். கிரக தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து சரபேஸ்வரை வேண்டினால் தோஷம் நீங்கப்பெற்று நலமாய் வாழ்வது உறுதி என்கின்றனர்.


வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிப்பதை இங்கு தான் காண முடிகிறது. மேலும் வெள்ளைப் பூசணியில் நெய் விளக்கு ஏற்றி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடை பெறும். பங்குனி உத்திரத்தில் தெப்பத் திருவிழாவும், ஐப்பசி மாதம் அன்னாபி ஷேகமும் நடக்கிறது. சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப் படுகின்றது.ஒவ்வொரு பிரதோஷத் தன்று பக்தர்கள் அதிகமாக கூடுகின்றனர்,

தினமும் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 வரை, அதன் பின்பு மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை கோவில் வழிபாட்டுக்கு திறந்திருக்கும்.









Thursday, December 28, 2017

"கோபம்" ANGER MANAGEMENT - WHAT IT KILLS??? (TAMIL)



சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்


மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

கோபம் உன்னையே அழித்து விடும்:

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது

நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது

எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போதுஇப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்துகழுதைஎன்று திட்டும்போது நாம்குரங்குஎன்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்


கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்:

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.
இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன அதனால் கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்க

திருகுறள் 
அதிகாரம்வெகுளாமை 
குறள் இயல்துறவறவியல்
குறள் பால்அறத்துப்பால்
குறள்:305

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

“If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay.”