Thursday, December 21, 2017

Beggar Turns out be a Crorepati Trader - Muttaiah Nadar !!!!



Dated 21-12-2017

உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்து வந்த தமிழக கோடீஸ்வரர்!!!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலி மாவட்டத்தில் பிச்சையெடுத்து வந்தவரை விசாரித்தபோது, அவர் தமிழகத்தைத் சேர்ந்த கோடீஸ்வரர் என்பதும், அவரிடம் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ஆணவங்கள் இருந்ததும் தெரிய வந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலி மாவட்டத்தில் உள்ள ரால்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பிச்சைக்காரர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இது அங்குள்ள சுவாமி பாஸ்கர் ஸ்வரூப் ஜி மகாராஜ் கவனத்தை ஈர்த்துள்ளது. உடனடியாக அவரை வரவழைத்து, அவரது சகாக்களிடம் அனுப்பி குளிப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லியுள்ளார். அப்போது, அந்த பிச்சைக்காரரின் துணியில் ஆதார் கார்டும், வங்கியில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களும் இருந்துள்ளன.

மொத்தம் ரூ. 1,06,92,731 கோடி அவரது பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவரது ஆதார் கார்டை வைத்து அவர்கள் பார்க்கும்போது, அவர் பிச்சைக்காரர் அல்ல என்பதும், தமிழகத்தில் இருந்து வந்த கோடீஸ்வரர் என்பதும் அறிந்தவுடன் அதிர்ந்து போயினர்.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை வைத்து, அவரது குடும்பத்தினருக்கு சுவாமி தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது பெண் கீதா வந்து தனது தந்தையை அழைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சுவாமி பாஸ்கரிடம் நவ் பாரத் டைம்ஸ் பேசுகையில், ''கடந்த 13 ஆம் தேதி முதல் பள்ளி வளாகத்திற்கு அருகே அவரைப் பார்த்து வந்தேன். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா? என்று தேடிக் கொண்டு இருந்தார். அவரை அழைத்து வந்து, குளிக்க வைத்து, ஆடை கொடுத்து, உணவு வழங்கப்பட்டது. அப்போது அவரிடம் இருந்த ஆதார் கார்டை பார்க்கும்போது அவர் தமிழத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தையா நாடார் என்பது தெரிய வந்தது. அவரது வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது அனைத்தும் சரியாக இருந்தது. முத்தையா நாடாரின் மகள் கீதா வந்து அவரை அழைத்துச் சென்றார்'' என்றார்.

தனது தந்தையை அழைத்து செல்லும்போது சுவாமிக்கு கீதா நன்றி தெரிவித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து கீதா கூறுகையில், ''எனது தந்தை ரயில் பயணத்தில் வழியை தவற விட்டு விட்டார், அவரை கடந்த ஆறு மாதங்களாக தேறி வருகிறோம். சில மருந்துகளால் அவர் ஞாபக சக்தியை இழந்துவிட்டார். நான் சுவாமிஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இதையடுத்து, ரால்பூரில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேச வேண்டும். அப்போதுதான், அவர்கள் பற்றிய உண்மை நிலை தெரிய வரும் என்று சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


banner
Previous Post
Next Post

0 comments: