Tuesday, January 16, 2018

Diabetes - சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும் முறை !!!


Diabetes

Diabetes, often referred to by doctors as diabetes mellitus, describes a group of metabolic diseases in which the person has high blood glucose (blood sugar), either because insulin production is inadequate, or because the body's cells do not respond properly to insulin, or both

சர்க்கரைநோய்
சர்க்கரைநோய் என்பது என்ன? இரைப்பைக்கும்முன்சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம்(Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுஇந்த இன்சுலின் தான்.
ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின்அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர்.

டயாபட்டீஸ்சர்க்கரைநோய் வரக் காரணங்கள்:
பரம்பரைஒரு காரணமாகலாம்
உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
நகர்புறவாழ்வியல் சூழல்
முறையற்றஉணவு பழக்கம்
மது, புகை, போதை பொருட்களால்
உணவில்அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்புஉணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்

சர்க்கரை நோயின்அறிகுறிகள்:
அடிக்கடிசிறுநீர் கழித்தல்
சிறுநீர்கழித்ததும் கை, கால், மூட்டுவலி
அதிகவியர்வை (துர்நாற்றாத்துடன்)
சிறுநீரில்,எறும்பு மொய்த்தல்
அடிக்கடிதாகம், அதிக பசி
தூக்கமின்மை
காயம்பட்டால்ஆறாதிருத்தல்

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
அதிகஅளவில் இனிப்பு பொருட்களை உண்பது
நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
வேகாதஉணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்தபொருட்கள் உண்பதால்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்  

1. டயாபடீஸைவிரட்டலாம்:
அதிகஎடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச்சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியே மிக உயர்ந்த வழி.
முறையானஉடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில்உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள்.
ஏற்கெனவேசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சிமிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரைநோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம்சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.

2. காலைஉணவைச் சாப்பிட மறக்காதீர்கள்:
காலையில்எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச்சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலைஉணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும்என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பதுநல்லது.

3. மகிழ்வானசூழல்:
பொதுவாகநன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வரவாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச்சக்தியும், நல்ல மூடும் உருவாகும்என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.
இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாகவாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின்அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில்பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

4. ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர்ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அடிக்கடி மாறிமாறி, இதய நோய், இதயத்தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில்வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய்தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.
சர்க்கரைநோய் வந்த பின்னர், அதைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால்போதும்.
சர்க்கரைநோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னிபிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.

சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வாழைத்தண்டு, சாம்பல் பூசணி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கத்தரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம்பிஞ்சு, அவரைப்பஞ்சு

சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
முருங்கைகீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைகீரை, தூதுவளை கீரை, முசுமுசுக்கைகீரை, துத்தி , கீரை, மணத்தக்காளி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை, சிறு குறிஞ்சான் கீரை, புதினா கீரை

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
விளாம்பழம், அத்திப்பழம், பேரீத்தம்பழம், நெல்லிக்காய், நாவல்பழம், மலைவாழை, அன்னாசி, மாதுளை, எலுமிச்சை, ஆப்பிள் , பப்பாளி, கொய்யா, திராட்சை, இலந்தைபழம், சீத்தாப்பழம்

சர்க்கரையை கட்டுபடுத்தும்சாறுவகைகள்:
எலுமிச்சைசாறு -100மி.லி, இளநீர் -100மி.லி, வாழைத்தண்டு சாறு -200மி.லி, அருகம்புல் சாறு-100மி.லி, நெல்லிக்காய் சாறு -100மி.லி, கொத்தமல்லி சாறு-100மி.லி, கறிவேப்பிலைச் சாறு -100மி.லி,

தவிர்க்க வேண்டியவைகள்:
சர்க்கரை(சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
அடிக்கடிகுளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.

வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

Saturday, January 13, 2018

HAPPY PONGAL (2018)


பொங்கல் பண்டிகை !!!
தைப் பொங்கல் என்பது தை மாதம் முதல் திகதியில் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இவ்விழா சமயங்கள் கடந்து அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பொங்களானது இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக கிராமங்களிலே இவ்விழா கொண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவினைப் பற்றி இப்போது பார்ப்போம்.

போகி பண்டிகை
‘போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால் தான் பயிர்கள் செழிக்கவும் உயிர்கள் வாழவும் முடியும். எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’யென்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.
தற்போது, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இந்த போகியன்று வீட்டின் கூரையில் பூலாம்பூ வைப்பது வழக்கம்.
ஆனால் தற்போது போகியன்று டயர்களைக் கொளுத்தும் மூடத்தனம் பரவலாக நடந்து வருக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. எனவே நாம் சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பு, காய் கணிகளை வைத்து கடவுளுக்குப் படைப்பார்கள். ஆனால் நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்து பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள். தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனனை செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எது எப்படியிருந்தாலும் பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!….

மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. ‘ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. ‘ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர்.
அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன என்று கூறினாலும் மிகையாகாது. அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவது தான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன. மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, ‘வீர நடை’ நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு ‘அங்க வஸ்திரம்’ போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் கதாநாயகர்களும் காளைகளே!..

திருவள்ளுவர் தினம்
நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர் தினமும் மாட்டுப்பொங்கள் அன்றே வந்துள்ளது. கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார். திருக்குறளில் சொல்லப்படாத விடயமே இல்லை. ‘உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத வி்டயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான வள்ளுவ பூஜையாகும்.
இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். காணும்பொங்கல் பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது ‘கானு’ பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

காணும் பொங்கல் 
அன்றும் புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடு காணப்பட்டது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பது கூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்கலாமே…. வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், சூரியனைகண்ட பனிபோல விலகி இந்த இனிய பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, January 6, 2018

OMG Facts of Banana Leaves !!!


Banana leaves have a wide range of applications because they are large, flexible, waterproof and decorative. They are used for cooking, wrapping and food-serving in a wide range of cuisines in tropical and subtropical areas. They are used for decorative and symbolic purposes in numerous Hindu and Buddhist ceremonies. In traditional homebuilding in tropical areas, roofs and fences are made with dry banana-leaf thatch. Banana and palm leaves were historically the primary writing surfaces in many nations of South and Southeast Asia
Eating food served on banana leaf is found to be healthy. Serving hot food on banana leaf will emanate important nutrients from the leaf which will be mixed with the food and will be eaten. Banana leaves contain large amounts of polyphenols such as epigallocatechin gallate, or EGCG, also found in green tea. Polyphenols are natural antioxidants found in many plant based foods. 

வாழை இலையின் மருத்துவ குணங்கள்
வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.

விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். ‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது
சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே, வாழை இலையில் சாப்பிடுவதை நாம் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

Friday, January 5, 2018

WHAT WE REAP FROM VEGETABLE!!!!



VEGETABLE

Vegetables play an important role in human nutrition. Most are low in fat and calories but are bulky and filling. They supply dietary fibre and are important sources of essential vitamins, minerals, and trace elements. Particularly important are the antioxidant vitamins A, C, and E.


When vegetables are included in the diet, there is found to be a reduction in the incidence of cancer, stroke, cardiovascular disease, and other chronic ailments. Research has shown that, compared with individuals who eat less than three servings of fruits and vegetables each day, those that eat more than five servings have an approximately twenty percent lower risk of developing coronary heart disease or stroke. The nutritional content of vegetables varies considerably; some contain useful amounts of protein though generally they contain little fat, and varying proportions of vitamins such as vitamin A, vitamin K, and vitamin B6; provitaminsdietary minerals; and carbohydrates.



நுரையீரல்புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள்என்பது இயற்கை நமக்கு அளித்துள்ளகொடை எனலாம். அந்த வகையில்காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச்சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையானஎண்ணற்ற சத்துகள் உள்ளன.
அதேநேரத்தில்காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவேஇருக்கும்.
பச்சைமற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளைநாம் அதிகம் உண்பதால், தொண்டைபுற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில்பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் சத்தினை அளிக்கக்கூடியபொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானதுபுற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகைகாய்கறிகளில் அடங்கும்.
நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின்சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய்வராமல் தவிர்க்கலாம்.
மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சைநிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றைஉண்பதால் உடலின் நோய் எதிர்ப்புசக்தி மேம்படும்.
வேறுசில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்துஇருப்பின் அனீமியா எனப்படும் இரத்தசோகை நோய் ஏற்படும். பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறுவகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.
முட்டைகோஸ்உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்குஅவை அவசியமாகிறது.

அனைத்துகாய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள்மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,
தவிரமிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகைவெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ்அதிகம் உள்ளது.
உடலின்பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்குமுக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்துஉள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில்அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளைபராமரிக்க ஏதுவாகிறது.
எனவேஅதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாகஇருங்கள்.

மருதாணியின் மகிமை


மருதாணியின் மகிமை

பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்…

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.
மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்

INDIAN INGREDIENTS THAT HELPS YOU TO LOSE WEIGHT



கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா… என்று தேடிப்போக வேண்டாம்.
கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

மஞ்சள்:
மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

ஏலக்காய்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

மிளகாய்:
மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

பூண்டு:
கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

கடுகு எண்ணெய்:
மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

உளுந்தம் பருப்பு:
உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

தேன்:
உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

மோர்:
உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

சிறு தானியங்கள்:
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

பட்டை, கிராம்பு:
இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது

Tuesday, January 2, 2018

Indian Gooseberry " difficult to find now a day "


நெல்லிக்காயின் மருத்துவ குணம்

பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

Millet (கம்பு) !!! - The Health we Ignored in Fast World



நோய் எதிர்ப்புசக்தியைத் தூண்டும் கம்பு!
இந்தியாவில்விளையும் தானிய வகைகளில் கம்பும்ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும்காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாககம்பு இருந்து வந்துள்ளது. இதுஇந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன்மருத்துவக் குணத்தையும் காண்போம்.
நம்முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானியவகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல்வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால்இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளைமறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டுவந்தனர். நாவின் சுவையை அதிகம்விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
இரவுநேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிகநேரம் ஒரே இடத்திலிருந்து வேலைசெய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில்வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம்கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிகாலை வேளையில் அருந்தி வந்தால் உடல்சூடு குறையும்.
சோர்வு நீங்க
மனச்சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடினவேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள்புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதியவேளையில் அருந்தி வந்தால் உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல்கூழ் செய்து விற்பனை செய்துவருகிறார்கள்.
அஜீரணக் கோளாறுநீங்க
அஜீரணக்கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிநன்கு பசியெடுக்கும்.
வயிற்றில்புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும்வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம்கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசிசேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கிமதிய உணவில் சேர்த்துக் கொண்டால்குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய.
உடல்வலுவடைய கம்பு மிகச் சிறந்தஉணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண்நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தைவலுவாக்கும்.
* சிறுநீரைப்பெருக்கும்.
* நரம்புகளுக்குபுத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தைசுத்தமாக்கும்.
* உடலில்தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய்எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவைவிருத்தி செய்யும்.
* இளநரையைப்போக்கும்.


*************
அதிகமாககம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டுஆரோக்கியமாக வாழலாம்.
*************